திருமணத்தன்று மணமகள் புது பட்டுப் புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.!

சென்னை 12 டிசம்பர் 2022 திருமணத்தன்று மணமகள் புது பட்டுப் புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.!

தெலுங்கானா மாநிலம் திருமணத்திற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாம் பேட்டை மாவட்டம் நவிபேட் நகரை சேர்ந்தவர் ரவளி. எம் சி ஏ படித்த ரவளிக்கும் மென் பொறியாளராக பணியாற்றும் சந்தோஷ் என்பவருக்கும் இன்று நவிபேட்டில் உள்ள திருமண மண்டப ஒன்றில் திருமணம் நடைபெற இருந்தது.

திருமணத்துக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு ரவளி வருங்கால கணவன் சந்தோஷ் உடன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது.

அதன்பின் அதிகாலை 4 மணி அளவில் திருமண மண்டபத்தில் உள்ள அறை ஒன்றுக்கு சென்ற ரவளி திருமணத்தன்று அணிந்து கொள்வதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த பட்டுப் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் ரவளியை காணாமல் தேடிய உறவினர்கள் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதனர்.

இது பற்றி தகவல் இந்த நவிபேட் போலீசார் விரைந்து சென்று ரவளி உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக நிஜாமா பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த பின் மணமகன் சந்தோஷ் தொலை பேசியில் ரவளியை கொடுமை செய்ததாக ரவளியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Read Also  குறை பிரசவம் கருத்து மன்னிப்பு கோரினார் இயக்குனர் நடிகர் பாக்யராஜ்!

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சந்தோசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொலைபேசியில் பேசும் போது திருமணத்திற்கு பின் நீ வேலைக்கு போக வேண்டும், உங்கள் குடும்ப சொத்தில் உனக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று சந்தோஷ் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த ரவளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *