எச்சிஎல் (HCL) மற்றும் எஸ்ஆர்எஃப்ஐ (SRFI) ஆகியவை இணைந்து சென்னையில் 21வது ஆசிய ஜூனியர் அணி சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகின்றன.!!

சென்னை 07 பிப்ரவரி 2023 எச்சிஎல் (HCL) மற்றும் எஸ்ஆர்எஃப்ஐ (SRFI) ஆகியவை இணைந்து சென்னையில் 21வது ஆசிய ஜூனியர் அணி சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகின்றன.!!

  • சென்னை, இந்தியன் ஸ்குவாஷ் & டிரையத்லான் அகாடமியில் ஐந்து நாட்கள் போட்டிகள் நடைபெறும்
  • பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், சீன தைபே, கொரியா, குவைத், மலேசியா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டி
  • அனாஹத் சிங் மற்றும் கிருஷ்ணா மிஷ்ராவில் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்

சென்னை, பிப்ரவரி 07, 2023: உலக அலவில் முன்னணி நிறுவனமான எச்சிஎல், ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவுடன் (எஸ்ஆர்எஃப்ஐ) இணைந்து, அதன் 21வது ஆசிய ஜூனியர் அணி சாம்பியன்ஷிப்பை சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் & டிரையத்லான் அகாடமி பிப்ரவரி 8, 2023 முதல் தொடங்க உள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தப்போட்டியில் சீன தைபே, ஹாங்காங் (சீனா), ஜப்பான், கொரியா, குவைத், மலேசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய 10 ஆசிய நாடுகள் பங்கேற்க உள்ளது. இந்த ஆண்டையும் சேர்த்து, சென்னை ஐந்து முறை சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தியுள்ளது. அனைத்து போட்டிகளும் எஸ்ஆர்எஃப்ஐ ஃபேஸ்புக் பக்கம் (www.facebook.com/indiasquash) மற்றும் எச்சிஎல் இன் ஸ்போர்ட்ஸ் ஃபேஸ்புக் பக்கம் (https://www.facebook.com/HCLForSports/) மற்றும் யுடியூப் சேனலில் (www.youtube.com/user/HCLEnterprise ல் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

Read Also  ஷிகர் தவான் அதிரடி சென்னை அணிக்கு 188 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க ஆண்டான 1983 முதல் சிங்கப்பூரில் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற அனைத்து சாம்பியன்ஷிப் போட்டிகளிலும், இந்தியா தொடர்ந்து வலுவான நிலையில் செயல்பட்டு வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் எப்போதும் முதல் நான்கு அணிகளில் இடம்பிடித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு இலங்கையின் ரத்மலானாவில் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்ற போது, ஆண்கள் அணியில் இந்தியா முதலிடம் பிடித்தது. அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு (ஹாங்காங்) முதலிடம் பிடித்தது. மறுபுறம் இந்திய பெண்கள் அணி 2013 இல் (சியோல், கொரியா) முதல் முறையாக சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பெற்றது.

பாகிஸ்தான், ஆண்கள் பிரிவில் நூர் ஜமான் (ஆசிய ரேங்க் 2 (பியு19), முஹம்மது ஹம்சா கான் (ஆசிய ரேங்க் 35 (பியு19), முஹம்மது அஷாப் இர்பான் (ஆசிய ரேங்க் 289 (பியு19) மற்றும் அனஸ் அலி ஷா (ஆசிய தரவரிசை 92 (பியு19) ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். ஐரா பிந்தி அஸ்மான் (ஆசிய ஜூனியர் ரேங்க் 2 (ஜியு19), யஷ்மிதா ஜதிஷ்குமார் (ஆசிய ஜூனியர் ரேங்க் 36 (ஜியு19), விட்னி இசபெல்லா அனாக் வில்சன் (ஆசிய ஜூனியர் ரேங்க் 2 (ஜியு15) மற்றும் டாய்ஸ் லீ யே சான் (ஆசிய ஜூனியர் ரேங்க் 2 (ஜியு17) ஆகியோர் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள் அணியில் முதலிடத்தில் உள்ளனர். இந்தியா ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளது.

Read Also  9வது தமிழ்நாடு மாநில டென்பின் பந்துவீச்சு சாம்பியன்ஷிப் !!

இந்திய அணியை கிருஷ்ணா மிஸ்ரா (ஆசிய ரேங்க் 7 (பியு19), பார்த் அம்பானி (ஆசிய ரேங்க் 22 (பியு19)), ஷரன் பஞ்சாபி (ஆசிய ரேங்க் 31 (பியு19) மற்றும் ஷௌர்யாபாவா (ஆசிய தரவரிசை 2 (பியு19) ஆகியோர் ஆண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். பெண்கள் அணியின் பிரிவில் யு17 சாம்பியன் அனாஹத் சிங் (ஆசிய ஜூனியர் ரேங்க் 3 (ஜியு17), பூஜா ஆர்த்தி ஆர் (ஆசிய ஜூனியர் ரேங்க் 7 (ஜியு19), தியானா பரஸ்ரம்பூரியா (ஆசிய ஜூனியர் ரேங்க் 5 (ஜியு17)) மற்றும் யுவ்னா குப்தா (ஆசிய ஜூனியர் தரவரிசை 42 (ஜியு19) ஆகியோர் பெருமை சேர்த்துள்ளனர்.

எச்சிஎல் ஸ்குவாஷ் போடியம் திட்டத்தின் ஒரு பகுதியாக பிஎஸ்ஏ டூர்ஸ், உயர் செயல்திறன் முகாம்கள், நடுவர் கிளினிக்குகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம்கள் மற்றும் பிற போட்டிகள் போன்ற முன்முயற்சிகளுடன் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் ஸ்குவாஷை எச்சிஎல் ஆதரித்து வருகிறது. ஆசிய மற்றும் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் ஸ்குவாஷ் வீரர்களுக்கு சிறந்த தரவரிசையை அடைய இந்த போட்டி மேலும் உதவும். சிறந்த ஆசிய ஜூனியர்களுடன் விளையாடுவது இந்திய வீரர்களின் சர்வதேச வெளிப்பாட்டை அதிகரிக்கவும் அவர்களின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *