கடற்கரை ரெயில் நிலையத்தில் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரெயில் விபத்துக்குள்ளானது.
சென்னை 24 ஏப்ரல் 2022 கடற்கரை ரெயில் நிலையத்தில் பிரேக் பிடிக்காததால் கட்டுப் பாட்டை இழந்த மின்சார ரெயில் விபத்துக்குள்ளானது.
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் பிரேக் பிடிக்காததால் கட்டுப் பாட்டை இழந்த மின்சார ரெயில் நடைமேடையில் ஏறி இன்று விபத்துக்குள்ளானது.
கட்டுப்பாட்டை இழந்த ரெயில், தடம்புரண்டு நடைமேடையில் ஏறி கடைகள் மீது மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது.
.
தீயணைப்பு துறையினர் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சிலர் காயமடைந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை.
மேலும் விபத்திற்குள்ளான ரயிலிலும் பொதுமக்கள் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.