தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் அணியினர் முன்னிலையில் இருக்கிறார்கள்.
சென்னை 20 மார்ச் 2022 தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் அணியினர் முன்னிலையில் இருக்கிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது துணை தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு மீண்டும் துணை தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையை தொடங்கியது என அறிவிக்கப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் நாசர், பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷால் ஆகியோர் முன்னிலையில் இருக்கிறார்கள்.
துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் கார்த்தி, நடிகர் கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
மொத்தமுள்ள 29 பதவிகளில் அனைத்து பதவிகளுக்கும் நடிகர் விஷால் அணியினர் முன்னிலை பெற்ற நிலையில் நடிகர் இயக்குநர் பாக்கியராஜ் அணியினர் வெளிநடப்பு செய்தனர்.
பாக்கியராஜ் அணியினர் தேர்தலில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் இருந்ததாக கூறி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்