சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை வேலூர் நீதிமன்றம் விடுவித்தது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.!

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை வேலூர் நீதிமன்றம் விடுவித்தது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.!

சென்னை 10 ஆகஸ்ட் 2023 தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2006ம் ஆண்டு, விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிந்தனர். அவ்வழக்கு, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது; 2022 நவ., 7ல், வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லாததால், பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவிப்பதாக, வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்த லீலா கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார்.

இந்நிலையில், வேலூர் மாவட்ட நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்து தீர்ப்பளித்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த விசாரணை இன்று (ஆக.,10) மாலை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *