ஒத்தைக்கு ஒத்தை வா” என காவலரை வம்புக்கு இழுத்த பாஜக நிர்வாகி கைது.!

சென்னை 06 டிசம்பர் 2022 ஒத்தைக்கு ஒத்தை வா” என காவலரை வம்புக்கு இழுத்த பாஜக நிர்வாகி கைது.!

சட்டையை கழற்றி விட்டு ஒத்தைக்கு ஒத்தை வா..” போலீசாரை மிரட்டிய பாஜக நிர்வாகி அதிரடியாக கைது!

காங்கேயத்தில் சட்டையை கழட்டி வைத்துவிட்டு “ஒத்தைக்கு ஒத்தை வா” என காவலரை வம்புக்கு இழுத்த பாஜக நிர்வாகி கைது.

தாராபுரத்தில் இருந்து காங்கேயம் வந்த அரசு பேருந்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக காவல்துறையினருக்கும் பாஜக நிர்வாகிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அங்கு சென்று காவல்துறை அதிகாரிகள் இரு தரப்பிலும் விசாரிக்கையில் இரு தரப்பினருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின் பாஜக மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன், நகர தலைவர் சிவபிரகாஷ் உள்பட  நிர்வாகிகள் சிலருடன் சேர்ந்து கொண்டு பாஜக மாவட்ட செயலாளர் ராஜா பணியில் இருந்த ரமேஷ் என்ற காவல்துறையினரை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சட்டையை கழட்டி வைத்து விட்டு ஒத்தைக்கு ஒத்தை வா பாக்கலாம்” என கூறியதாகவும் அதையடுத்து சக போலீசார் அவரை சமாதானம் பேசி அனுப்பி வைத்தாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வீடியோ இணையத்தில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *