பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்து 4 பேர் உயிரிழப்பு; 80 பேர் படுகாயம்.
பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்து 4 பேர் உயிரிழப்பு; 80 பேர் படுகாயம்.
கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 80 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளை கண்காணித்து வருகின்றனர்.