திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம்.. தவிக்கும் மாற்றுத்திறனாளி பெண்..!
சென்னை 11 செப்டம்பர் 2022 திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம்.. தவிக்கும் மாற்றுத்திறனாளி பெண்..!
மாற்று திறனாளி பெண்ணை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தெத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்று திறனாளி பெண்ணான சுமதியிடம் (35) கடந்த 3 ஆண்டுகளாக அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (24) என்பவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பலமுறை மாற்று உல்லாசம் அனுபவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் மாற்று திறனாளி பெண்ணும் உல்லாசத்திற்கு சம்மதித்துள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட விஜயகுமார் உல்லாசம் அனுபவித்ததோடு மட்டுமின்றி அவரிடம் இருந்து மூன்றரை சவரன் நகை மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக சுமார் 2 லட்ச ரூபாயும் பெற்றுக்கொண்டுள்ளார்.
அதன் பிறகு திருமணம் செய்ய மறுத்ததோடு குடும்பத்தினருடன் சேர்ந்து மாற்று திறனாளி பெண்ணை தாக்கியதாவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அந்த மாற்றுத்திறனாளி பெண் அளித்த புகாரின் பேரில், மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.