இரண்டு நாளில் புதிய அரசு அமையா விட்டால் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே எச்சரிக்கை.

சென்னை 12 மே 2022 இரண்டு நாளில் புதிய அரசு அமையா விட்டால் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே எச்சரிக்கை.

இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது.

அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்…

இலங்கையில் இரண்டு நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்து விடும்.

அடுத்த இரு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப் படுத்தாவிட்டால் நான் மத்திய வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன்.

தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் தீர்வு இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வெற்றியடையாது இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் பி.நந்தலால் வீரசிங்கே என தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *