சுதந்திர தின விழா தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் தேசிய கொடி ஏற்றுகிறார்!!

சுதந்திர தின விழா தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் தேசிய கொடி ஏற்றுகிறார்!!

சென்னை 15 ஆகஸ்ட் 2023 இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி உரை நிகழ்த்த உள்ளார்.

விழா மேடையில், ‘தகைசால் தமிழர்’ விருதை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின், வழங்குகிறார்.

முன்னதாக காலை 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்கிறார்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சருக்கு முப்படை அதிகாரிகளை தலைமை செயலாளர் அறிமுகம் செய்து வைப்பார்.

இதன்பின்பு முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வார்.

பின்னர் கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும். இடத்துக்கு முதல்-அமைச்சர் சென்று தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்துவார்.

இதன்பின்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *