தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை 22 ஏப்ரல் 2022 தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது…

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூபாய் .500 அபராதம் வசூலிக்க மீண்டும் தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதம் வசூலிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரிப்பதால் பதற்றம் அடைய தேவை இல்லை என மத்திய அரசே கூறியுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வழங்கி உள்ளோம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *