அரசு பணியில் உள்ள ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை.!

சென்னை 21 ஏப்ரல் 2022 அரசு பணியில் உள்ள ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை.!

இந்த சட்டம் 1973ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி பணியில் இருக்கும் அரசு ஊழியர் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அவ்வாறு இரண்டாவது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது என்றும் தமிழக அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்றும் கூறியுள்ள தமிழக அரசு, மேலும் அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்வதால் சட்ட ரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *