தமிழகத்திலேயே  முதன் முறையாக இன ஒற்றுமையை வலியுறுத்தி , தமிழ் மலையாள புத்தாண்டுகளை இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி கல்லூரி மாணவிகள் !

சென்னை 14 ஏப்ரல் 2022 தமிழகத்திலேயே  முதன் முறையாக இன ஒற்றுமையை வலியுறுத்தி , தமிழ் மலையாள புத்தாண்டுகளை இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி கல்லூரி மாணவிகள் !

சென்னை , 13 ஏப்ரல் 2022 சென்னை , ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர் . – ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள், தமிழ் மற்றும் மலையாளப் புத்தாண்டு தினங்கள் அடுத்தடுத்து வருவதையொட்டி , இரு பண்டிகைகளையும் பாரம்பரிய முறைப்படி ஒன்றாக இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர் .

தமிழகத்திலேயே இப்படி ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறையாகும்.

இக் கல்லூரியில் பயிலும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் , இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன ஒற்றுமையை வலியுறுத்தி அண்மையில் , தமிழக முதல்வர் கேரளாவிற்குச் சென்று மலையாளத்தில் பேசி அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தார்.

இந்நிகழ்வால் ஈர்க்கப்பட்ட . டாக்டர் எம்.ஜி.ஆர் . ஜானகி கல்லூரி மாணவிகள் , கூட்டுக் கொண்டாட்டத்திற்கு கல்லூரி வளாகத்தில் , இன்று ( 13 ஏப்ரல் 2022 ) ஏற்பாடு செய்திருந்தனர் .

ஏப்ரல் 14 – ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டான சித்திரை மாதப் பிறப்பும் , ஏப்ரல் 15 – ஆம் தேதி ‘ விஷூ ‘ என்று அழைக்கப்படும் மலையாளப் புத்தாண்டான மேடம் ( MEDAM ) மாதப் பிறப்பும் தொடங்குகிறது .

இதனையொட்டி இக் கல்லூரியில் பயிலும் தமிழ் மற்றும் மலையாள மாணவிகள் தங்களது பாரம்பரிய வழக்கப்படி பட்டுப் புடவை -தாவணி மற்றும் கேரள கசவு ( KASAVU ) சேலை போன்ற உடைகளை அணிந்து வண்ணமயமாக வருகை புரிந்தனர் .

Read Also  தமிழ்நாட்டில் கல்விக்கான முதல் மெய்நிகர் ஆய்வகம், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தொடக்கம்!

இந்நிகழ்வின் போது , தமிழர் பாரம்பரியக் கலைகளான தப்பாட்டம் , ஒயிலாட்டம் , கரகாட்டம் மற்றும் மலையாள திருவாதிரைக் களி நடனங்கள் நடைபெற்றன .

மேலும் கல்லூரி மைதானத்தில் தரையில் , வண்ண வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கேரளத்தின் முக்கிய அம்சமான பூக்களமும் இடம்பெற்றிருருந்தது .

இக்கல்லூரியில் படிக்கும் வெளி மாநில மற்றும் வெளிநாட்டு மாணவிகள் , கதரில் நெய்யப்பட்ட கண்டாங்கி சேலையை உடுத்தி அழகுற பவனி வந்தனர் .

இரு மாநிலங்களுக்கும் இடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட , அதை எல்லாம் மறந்து நேசத்தோடும் , பாசத்தோடும் அன்பை வெளிப்படுத்தி , மனித உறவுகள் புனிதமானவை என்பதை மாணவிகள் புலப்படுத்தினர் .

இந்நிகழ்வு குறித்து டாக்டர் எம்.ஜி.ஆர் . – ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன் கூறுகையில் , “

எல்லா இனங்களிலும் புத்தாண்டு என்பது , ஒரு சிறப்பான நிகழ்வாகும் .

ஒவ்வொரு முறையும் புதிய ஆண்டு தொடங்கும் போது நம்முடைய வாழ்க்கை மேம்படும் என்ற உற்சாகம் மக்கள் மனதில் கரை புரண்டு ஓடும் .

தமிழ் மற்றும் மலையாளப் புத்தாண்டுகளும் இதற்கு விதிவிலக்கல்ல .

ஒற்றுமையை வலியுறுத்தி இந்தப் புத்தாண்டை மாணவிகள் கொண்டாடியதன் மூலம் இந்த சந்தோஷம் என்றும் அவர்களது மனதில் நிலைத்து நிற்கும் .

மாற்று இன மனிதர்களையும் நேசிக்க வைக்கும் .

‘ வேற்றுமையில் ஒற்றுமை ‘ என்பதே நமது நாட்டினுடைய தாரக மந்திரம் . அதையொட்டியே இந்தக் கொண்டாட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது ” என்றார் .

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *