ஜோதிட சாஸ்திரப்படி உங்களது வாழ்க்கைத்துணை அமையும் திசை!

சென்னை 16 மே 2022 ஜோதிட சாஸ்திரப்படி உங்களது வாழ்க்கைத் துணை அமையும் திசை!

திருமணம் செய்யும் போது பலரும் ஜோதிட சாஸ்திரத்தை பின்பற்றியே திருமணம் செய்கின்றனர்.

பலருக்கும் தங்களுக்கு வரப்போகிற வாழ்க்கைத் துணை அந்த திசையில் இருந்து வருமென எதிர்ப்பார்ப்பு இருக்கும். ஆண் பெண் இருவருக்குமே லக்னத்திலிருந்து இருக்கக்கூடிய இரண்டாவது வீடு குடும்ப ஸ்தானமாக அமைகிறது.

அத்தகைய லக்கினத்திற்க்கு ஏற்ப்ப வாழ்க்கை துணை அமைய பலன்கள் இதோ பார்க்கலாம்..

மேஷ லக்னக்காரர்களுக்கு.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை அவர் பிறந்த இடத்தில் இருந்து தெற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து அமையும்.  திருமணத்திற்கு பிறகு வாழ்க்கைத்துணை பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு உறுதுணையாக இருப்பார்.

பொதுவாக மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் திருமணத் தடை நீங்க மகாலட்சுமி வழிபாடு செய்து வருவது நன்மையைக் கொடுக்கும்.

ரிஷப லக்னக்காரர்களுக்கு.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணை அவர் பிறந்த இடத்தில் இருந்து மேற்கு அல்லது வடக்கு திசையிலிருந்து வருவார்.

இவர்களின் வாழ்க்கை துணை சிறிது பிடிவாத குணமும் எடுத்த கொள்கையில் மாறாதவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் சொந்த வீடு – மனை – வாகன வசதி – பூமி லாபம் என்பது ஏற்படும்.

திருமணத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் சிறிது முன்னேற்றம் காணப்படும். இவர்கள் முருகப்பெருமானை வழிபட்டால் திருமண தடையை நீங்கும்.

மிதுன லக்னக்காரர்களுக்கு.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து இவர்களுக்கு வாழ்க்கை துணை வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

Read Also  ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபடவேண்டிய விநாயகர் மற்றும் சொல்லவேண்டிய கணபதி மந்திரம்.!

வரக்கூடிய வாழ்க்கைத் துணை தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் – பழைமையான விஷயங்களின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் சிவபெருமான் மற்றும் அம்மனை வணங்கி வருவதன் மூலம் திருமணத்தடைகள் அகலும்.

கடக லக்னக்காரர்களுக்கு.

கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருந்து வருவார்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் தொழில் மிக மிகச் சிறப்பாக அமையும். திருமணம் தடைபட்டால் இவர்கள் விநாயகர் வழிபாடு செய்து வருவது மிகுந்த நன்மையைக் கொடுக்கும்.

சிம்ம லக்னக்காரர்களுக்கு.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை தெற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வருவார்கள்.

இவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகள் அதிக ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களது திருமணம் தடைபட்டால் குலதெய்வத்தையும் காவல் தெய்வத்தையும் வணங்கி வருவது நன்மையைக் கொடுக்கும்.

கன்னி லக்னக்காரர்களுக்கு.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேற்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து இவர்களுக்கு வாழ்க்கை துணை அமையும்.

பொருளாதாரம் சம்பந்தமான விஷயத்தில் இவர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் மிகுந்த யோகம் என்பது வந்து சேரும்.

திருமணம் தடைபட்டால் இவர்கள் முருகனை வழிபாடு செய்து வருவது நன்மையை கொடுக்கும்.

துலா லக்னக்காரர்களுக்கு.

துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணை கிழக்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து வருவார். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை குடும்பம் சம்பந்தமான விஷயங்களில் எந்த ஒரு முடிவிலும் இவர்கள் வாழ்க்கை துணையிடம் அடங்கிப் போவது சிறந்தது. இவர்கள் சிவபெருமானை வழிபட்டு திருமண தடை நீக்கிக்கொள்ளலாம்.

Read Also  கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள்!

விருச்சிக லக்னக்காரர்களுக்கு.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை கிழக்கு மற்றும் தெற்கு திசையில் இருந்து வருவார்.

முடிந்தவரை விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய வாழ்க்கைத் துணை அமையும்.

பொருளாதாரத்தில் மிகப்பெரிய நல்ல லாபம் என்பது திருமணத்திற்குப் பிறகு ஏற்படும்.

திருமணம் தடைபட்டால் சிவபெருமானையும் பெருமாளையும் வணங்குங்கள்.

நன்மை வந்து சேரும்.

தனுசு லக்னக்காரர்களுக்கு.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை தெற்கு மற்றும் மேற்கில் இருந்து வரக்கூடிய வாழ்க்கைத் துணை இவர்களுக்கு அமையும்.

இவர்களுக்கு அமையக்கூடிய வாழ்க்கைத்துணை மிகுந்த புத்திக் கூர்மை கொண்டவர்களாகவும் – சாமர்த்தியம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்கள் திருமணம் தடைபட்டால் இவர்கள் சித்தர்களையும் பெருமாளையும் வணங்கி வருவது மிகப் பெரிய நன்மையை கொடுக்கும்.

மகர லக்னக்காரர்களுக்கு.

மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை வடக்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வாழ்க்கைத் துணை அமையும்.

வாழ்க்கைத் துணையின் முகம் வட்டமாக இருக்கும். எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் வாழ்க்கைத்துணையுடன் கலந்து ஆலோசித்து அதன் பிறகு முடிவெடுப்பது நன்மையைக் கொடுக்கும்.

அம்மனை வழிபட்டு திருமணம் தடையை நீக்கிக்கொள்ளலாம்.

குமப லக்னக்காரர்களுக்கு.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை கிழக்கு மற்றும் வடக்கு திசையிலிருந்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உங்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத்துணை அடுத்தவர்களுக்கு புத்திமதி சொல்லக்கூடிய அளவிற்கு தங்களை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்களுடைய திருமணம் தடைப்பட்டால், சிவபெருமானையும் முருகனையும் வணங்கி வருவது நன்மையைக் கொடுக்கும்.

மீன லக்னக்காரர்களுக்கு.

மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து வருவார்.

Read Also  நமது குடும்பத்தில் செல்வ வளத்தை பெருக செய்யும் வழிபாடுகள்.

இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை நுண்ணறிவு உடையவர்களாகவும் – சிக்கனம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்.

இந்த லக்கினகாரர்களுக்கு திருமணம் தடைப்பட்டால் குல தெய்வத்தையும் திருச்செந்தூர் முருகனையும் வணங்கி வருவது மிகுந்த நன்மையைக் கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *